நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 3

“தம்பி இங்க வா! நான் ரொம்ப நேரமா ஒன்ன பாத்துகினு இருக்கேன். நீ இந்த முனைக்கும் கடசிக்கும் நடையா நடந்துட்டு இருக்கியே! இன்னாதான் வோணும் வொனக்கு?” எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன்வந்தார் ஆட்டோக்கார அண்ணன் ஒருவர். பாக்கெட் டைரியிலிருந்த முகவரியை காண்பித்து, ஒரு மணி நேரமாக இந்த கோவிந்தசாமி தெருவில் அலைந்தும் என்னால் 23/A எண்ணுள்ள வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். “தம்பி! ஒன்னால ஊட்ட கண்டுபிடிக்க முடியலன்னா யாராண்டையாவது கேக்கணும்! இப்படி … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 2

வருடா வருடம் நடக்கும் புத்தகத் திருவிழாவை அந்த வருடம் முருகன் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய அலுவலக நண்பர்களில் என்னையும் மோகனையும் தவிர எவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் என்பதே இல்லை. இருந்தாலும் மற்றவர்கள் புத்தக அரங்குகளை சுற்றி பார்க்கும் நோக்கிலும் அப்படியே நாங்கள் அங்கு கிடைக்கும் காளான் சூப் வாங்கித் தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பியும் உடன் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி இருந்தேன் நான். மண்டபத்தினுள் கடைசி அரங்காக சினிமா … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 1

இந்தக் கதையில் வரும் நடிகையின் பெயரை மானநஷ்ட வழக்குகள் வாங்காமல் இருக்கும் பொருட்டு தவிர்த்து விடுகிறேன். அதே சமயம் கதை முழுக்க நடிகை என்று மட்டுமே நான் அவளை குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் கதையில் உயிரோட்டம் இருக்காது. எனவே அவளுக்கு நான் கற்பனையாக ஜெனி என்று பெயரிடுவதென தீர்மானித்துள்ளேன். ஜெனி என்பது ஜெயவர்த்தினி என்பதன் சுருக்கமாகவோ அல்லது ஜெனிஃபர் என்பதன் சுருக்கமாகவோ இருக்கலாம். அவளின் கல்லூரி நண்பர்கள் மத்தியில் அவள் அவ்வாறே அழைக்கப்படுவதாக ஒரு முறை என்னிடம் சொல்லியிருந்தாள். … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 3

அப்போதுதான் கவனித்தேன். டாக்டர் அறையிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மூன்று நிமிட இடைவெளியில் கையில் மருந்து சீட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். டாக்டர் தேவசகாயத்துக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை போலிருக்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக அழைத்து பார்க்க வேண்டியவர், பேட்ச் ப்ராசஸிங் போல ஐந்து ஐந்து பேராக அழைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அறை ஒருவேளை பெரியதாக இருக்கும்; அதனால்தான் அனைவரையும் தைரியமாக உள்ளே வரச் சொல்லி மருத்துவம் பார்க்கிறார். எனவே … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 2

தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை முடிந்ததும் ஊமை நாடகம் மீண்டும் தொடர்ந்து. அளவுக்கதிகமாக ஒப்பனை செய்யப்பட்ட அந்த மூன்று பெண்களின் முகத்தையே திரும்ப திரும்ப திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது.  மீண்டும் அத்தைக்காரி  ஏதேதோ சொல்லி அவர்களை குமுறி குமுறி அழ வைக்காமல் விடுவதில்லை என்ற முடிவோடு  இருந்தாள். வரும் ஆத்திரத்திற்கு எனக்கு அந்த டீவி பெட்டியை தூக்கி போட்டு உடைத்து விடலாமா எனத் தோன்றியது. கடந்த அரை மணி நேரமாக அந்த … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 1

“நிறுத்துங்க! எங்க அண்ணன யாருன்னு நினைச்சிட்டு இருக்கீங்க? சின்ன வயசுல உங்க எல்லோரையும் தவிக்க விட்டுட்டு போய் சேந்துட்டா உங்க அம்மா! அன்னைக்கு உங்க அப்பாவுக்கு சொந்தத்துலேயே பல பேரு பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க. ஆனா  எங்க ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னோட குழந்தைகள பாத்துக்க முடியாம போயிடுமோன்னு, கல்யாணம் பண்ணிக்காம இருவது வருஷமா உங்களுக்காகவே வாழ்ந்தவருடி அவரு… அவரோட தியாகத்துலையும் உழைப்புலையும் படிச்சி ஆளாகிட்டு, இன்னைக்கு நீங்க அவரையே எதிர்த்து கேள்வி கேக்கிறீங்களா? … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 6

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், வெள்ளை நிற டொயோட்டா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து காதை கிழிக்கும் சத்தத்துடன் தெலுங்கு பாடல் ஒன்று அலறிக் கொண்டிருந்தது. அக்காரிலிருந்து ஒரு இளவட்டக் கூட்டம் இறங்கி, பாலத்தை நோக்கி நடந்து வந்தது. பார்ப்பதற்கு தென்னிந்திய முகஜாடையுடன் இருந்த அந்தக் கூட்டத்தினரில், தமிழன் யாராவது இருக்க போகிறான். கொடியுடன் நிற்கும் என்னை பார்த்தால், “உண்ட உணவுக்கு காசு கொடுக்காததால், தண்டனையாக இவனை கொடியாட்ட வைத்து விட்டார்கள்” என்று தவறாக நினைத்துவிடக் … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 5

பக்கத்திலிருந்த ஆம்லெட் கடையில் உட்கார்ந்துகொண்டும், அவ்வப்போது பார்க்கிங் செய்ய வரும் வாகனங்களுக்கு “ஸாரா ஆகே லே ஜாவோ” என்று குரல் கொடுத்துக்கொண்டும் இருந்தேன். “இப்படி அங்கும் இங்கும் ஓடி ஓடி தகவல் சொல்லிக்கொண்டிருந்தால் என் தாவு தீர்ந்து விடும். ஆகவே ஏதாவதொரு உபாயம் செய்தாக வேண்டும்! என்ன செய்யலாம்?” என்று யோசித்ததில், சட்டென ஒரு யோசனை வந்தது. ஹனோகி பாலத்திற்கு வருவதற்கு முன்னர், சற்றுத் தூரத்தில் பியாஸ் நதிக்கரையில் கொட்டுவதற்காக சதுர வடிவத்தில் வெட்டப்பட்டிருந்த மலைக்கற்கள் அடுக்கி … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 4

நான் எதிர்மறையாகப் பேசியதால்தான் இப்படி நடந்துவிட்டது என்று தோன்றிற்று எனக்கு. ச்சே! என்ன ஒரு சனி நாக்கு எனக்கு. ஓராயிரம் முறை நேர்மறையாகப் பேசியிருப்பேன்; ஆனால் அப்போதெல்லாம் கம்மென்று இருக்கும் இந்தப் பிரபஞ்ச ஈர்ப்பு விதி, இந்த சாவி விவகாரத்தில் டக்கென தன் கடமையை செய்து முடித்துவிட்டது. கமலக்கண்ணன் சகட்டுமேனிக்கு தமிழிலும், தனக்குத் தெரிந்த இந்தியிலும் சரணை திட்ட ஆரம்பித்தான். எனக்கும் கோபம் தலைக்கு ஏறி இருந்தது. சரியான மடையன்! முழங்காலில் மூளை இருப்பவன் கூட இம்மாதிரி … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 3

காரின் முன்னிருக்கையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த என்னை கமலக்கண்ணன் உலுக்கி எழுப்பினார். கண்விழித்து பார்த்தால், கார் ரோட்டிலிருந்து இறங்கி ஏதோ ஒரு ஆல மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்தது. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரையிலும் ஒரே வயல் வெளிகளும், அதன் மீது வெண்மையான புகைப் பனியும் பரவியிருந்தது. கண்ணை கசக்கிக்கொண்டே வெளியில் நின்றிருந்த கமலிடம், “இது எந்த இடம்?” என்றேன். “நாம பதன்கோட் போற வழியில இருக்குற ஒரு குக்கிராமத்துல இருக்கோம் ஜி. இங்க வந்து பாருங்க,” என்று அருகில் … Read more