அதிதி தேவோ பவ – பகுதி 1
இந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் ஏன்தான் வருகின்றனவோ? ஏன் எல்லா நாட்களும் வேலை நாட்களாகவே இருக்கக் கூடாதா? என தோன்றும் அளவிற்கு என்னை வெறுப்படையச் செய்தவர், என்னுடைய அறைவாசியும் பக்கத்து படுக்கைக்காரருமான முபாரக். உருது பேசும் இஸ்லாமியரான முபாரக்கின் சொந்த ஊர் ஐதராபாத். ரங்லா ஹவேலி என்று அழைக்கப்படும் அந்த ஆண்கள் விடுதியில் நாங்கள் தங்கியிருந்த முதல் இரண்டு வாரங்களில், அவர் என்னிடம் சேந்தார் போல பத்து வார்த்தைகள் பேசி இருந்தால் அதுவே அதிகம். என்னிடத்தில் … Read more