டாக்டர் தேவசகாயம் – பகுதி 3

அப்போதுதான் கவனித்தேன். டாக்டர் அறையிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மூன்று நிமிட இடைவெளியில் கையில் மருந்து சீட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். டாக்டர் தேவசகாயத்துக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை போலிருக்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக அழைத்து பார்க்க வேண்டியவர், பேட்ச் ப்ராசஸிங் போல ஐந்து ஐந்து பேராக அழைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அறை ஒருவேளை பெரியதாக இருக்கும்; அதனால்தான் அனைவரையும் தைரியமாக உள்ளே வரச் சொல்லி மருத்துவம் பார்க்கிறார். எனவே … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 2

தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை முடிந்ததும் ஊமை நாடகம் மீண்டும் தொடர்ந்து. அளவுக்கதிகமாக ஒப்பனை செய்யப்பட்ட அந்த மூன்று பெண்களின் முகத்தையே திரும்ப திரும்ப திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது.  மீண்டும் அத்தைக்காரி  ஏதேதோ சொல்லி அவர்களை குமுறி குமுறி அழ வைக்காமல் விடுவதில்லை என்ற முடிவோடு  இருந்தாள். வரும் ஆத்திரத்திற்கு எனக்கு அந்த டீவி பெட்டியை தூக்கி போட்டு உடைத்து விடலாமா எனத் தோன்றியது. கடந்த அரை மணி நேரமாக அந்த … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 1

“நிறுத்துங்க! எங்க அண்ணன யாருன்னு நினைச்சிட்டு இருக்கீங்க? சின்ன வயசுல உங்க எல்லோரையும் தவிக்க விட்டுட்டு போய் சேந்துட்டா உங்க அம்மா! அன்னைக்கு உங்க அப்பாவுக்கு சொந்தத்துலேயே பல பேரு பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க. ஆனா  எங்க ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னோட குழந்தைகள பாத்துக்க முடியாம போயிடுமோன்னு, கல்யாணம் பண்ணிக்காம இருவது வருஷமா உங்களுக்காகவே வாழ்ந்தவருடி அவரு… அவரோட தியாகத்துலையும் உழைப்புலையும் படிச்சி ஆளாகிட்டு, இன்னைக்கு நீங்க அவரையே எதிர்த்து கேள்வி கேக்கிறீங்களா? … Read more